3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மானு பாக்கர்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மானு பாக்கர் 4-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார்.
25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் கொரிய வீராங்கனை யாங் ஜின் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனை கேமிலி வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரி வீராங்கனை மேஜர் வெரோனிகா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய வீராங்கனை மானு பாக்கர் 4-வது இடம்பெற்றார்.
Advertisement
Advertisement
முன்னதாக, துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் பிரிவில் மானு பாக்கர் இரண்டு வெண்கலப் பதங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.