பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மானு பாக்கர் 4-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார்.
25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் கொரிய வீராங்கனை யாங் ஜின் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனை கேமிலி வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரி வீராங்கனை மேஜர் வெரோனிகா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய வீராங்கனை மானு பாக்கர் 4-வது இடம்பெற்றார்.
முன்னதாக, துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் பிரிவில் மானு பாக்கர் இரண்டு வெண்கலப் பதங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.