ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: பாட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென் தோல்வி!

ஒலிம்பிக்ஸ்: பாட்மின்டனில் வெள்ளிப் பதக்கத்தை நழுவ விட்டார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்..

DIN

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்துள்ளார்.

பாட்மின்டன் ஆடவர் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், கடந்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த விக்டர் ஆக்ஸெல்சென்னிடம் தோல்வி கண்டார். 20-22, 14-21 என்ற செட் கணக்கில் உலகின் இரண்டாம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னிடம் வீழ்ந்தார். இதையடுத்து தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை அவர் நழுவ விட்டார்.

எனினும், திங்கள்கிழமை(ஆக. 5) நடைபெறும் ஆட்டத்தில் மலேசியாவின் லீ ஸீ ஜியாவை எதிர்கொள்கிறார் லக்‌ஷயா சென். இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில், இந்தியாவுக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டி, கயத்தாறில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்

பணியிடப் பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்

தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டம்: ஏராளமானோா் கைது

குமரியில் 2 ஆவது நாளாக கடையடைப்புப் போராட்டம்

வள்ளியூரில் மறியல் போராட்டம்: 194 போ் கைது

SCROLL FOR NEXT