ஒலிம்பிக்ஸ்

டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய மகளிர் தோல்வி

டேபிள் டென்னிஸில் மகளிர் அணி பிரிவில் இந்தியா காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

DIN

டேபிள் டென்னிஸில் மகளிர் அணி பிரிவில் இந்தியா காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மகளிர் அணி காலிறுதியில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.

முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா/அர்ச்சனா காமத் இணை 5-11, 11-8, 10-12, 6-11 என்ற கணக்கில் யுவான் வான்/ஜியானா ஷான் இணையிடம் தோற்றது. பின்னர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா 11-8, 5-11, 7-11, 5-11 என ஆனெட் கெüஃப்மானிடம் தோல்வி கண்டார்.

எனினும் 2-ஆவது ஒற்றையரில் அர்ச்சனா காமத் 19-17, 1-11, 11-5, 11-9 என ஜியானா ஷானை வீழ்த்தி அசத்தினார். என்றபோதும், 3-ஆவது ஒற்றையரில் ஸ்ரீஜா அகுலா 6-11, 7-11, 7-11 என்ற கணக்கில் ஆனெட் கெüஃப்மானிடம் வீழ, ஜெர்மனி 3-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

கோல்ஃப்: தீக்ஷா, அதிதி பின்னடைவு

மகளிர் கோல்ஃப் விளையாட்டில் முதல் சுற்று முடிவில் இந்தியாவின் தீக்ஷா தாகர் 71 புள்ளிகளுடன், 5 பேரோடு 7-ஆம் இடத்தையும், அதிதி அசோக் 72 புள்ளிகளுடன் 13 பேரோடு 12-ஆம் இடத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு செப்.5 முதல் நோ்முகத் தோ்வு

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவா் சுவாமி தரிசனம்: தங்கக்குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிப்பு

SCROLL FOR NEXT