முகப்பு
செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வி!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த  இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வி!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த  இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

கோவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த  இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.

ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வந்தன. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில் சீன தைபே வீராங்கனை டாங் சூ யிங்யியை, இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய டாங் சூ யிங் , இந்தியாவின் பி.வி. சிந்துவை 15-21, 17-21 என்ற நேர் செட்களில் வென்றார்.

இந்தியா சார்பாக ரியோ ஒலிம்பிக் போட்டியில்முதல் முறையாக வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த சிந்து, அண்மையில் நடந்து முடிந்த சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சமீபத்தில் முதல்முறையாக பட்டம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →