செய்திகள்

அக்டோபர் இறுதிக்குள் களம் திரும்புவேன்: சாய்னா

DIN

அக்டோபர் மாத இறுதிக்குள் களம் திரும்புவேன் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்தார்.
முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் சாய்னா, இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
அக்டோபர் மாத இறுதிக்குள் பாட்மிண்டனில் களமிறங்கிவிடுவேன். அதுவரை நடைபெறவுள்ள எந்தப் போட்டியிலும் விளையாட முடியாது. தற்போதைய நிலையில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கிறேன். அதில் பின்னடைவை சந்திக்க நேரிடலாம்.
ஏற்கெனவே 6 வாரங்கள் ஓய்வில் இருந்துவிட்டேன். முழு அளவில் பயிற்சியைத் தொடங்குவதற்கு இன்னும் 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். நான் முழு உடற்தகுதியைப் பெறும்பட்சத்தில் நவம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும். தற்போது நலமாக இருக்கிறேன். காயத்திலிருந்து மீள்வதற்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா, ரியோ ஒலிம்பிக்கில் காயம் காரணமாக குரூப் சுற்றோடு வெளியேறினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவருடைய வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT