செய்திகள்

3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கை போராட்டம்

DIN

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளெர் செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.

இதனால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 439 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை இலங்கை விளையாடி வருகிறது. இதில், 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கையின் குஷால் மெண்டீஸ் 110 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். துவக்க வீரர் கருணரத்னே 92 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 230 ரன்கள் பின்தங்கியுள்ளது. மேலும், 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி தீவிரமாக போராடி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியை வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்ற இந்திய அணிக்கு 8 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT