முகப்பு
செய்திகள்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு! 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய,அணி பந்து வீச்சினைத்  தேர்வு செய்துள்ளது.

Updated On : 24 ஆகஸ்ட், 2017 at 3:28 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:14 PM

பல்லகெலே: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய,அணி பந்து வீச்சினைத்  தேர்வு செய்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.  தம்புல்லாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி பீல்டிங்கினைத்  தேர்வு செய்தார்.

Advertisement

இந்திய அணியினைப் பொறுத்த வரை முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திசாரா, வனிது, சண்டகன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக துஷ்மந்தா, அகிலா தனஞ்ஜெயா மற்றும் மிலிந்தா ஸ்ரீவர்தனா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.