செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதிக்கு சாய்னா, சிந்து தகுதி!

எழில்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் யூவை வீழ்த்தினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சிந்து, 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 
சிந்து தனது அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார். சிந்து ஏற்கெனவே இரு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரை 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். சாய்னா தனது அரையிறுதியில் ஜப்பானின் ஒஹுஹுராவைச் சந்திக்கிறார்.

அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சாய்னா, சிந்து ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT