நான்கு நாள் டெஸ்ட் போட்டி தொடங்கியது: டுபிளெஸ்ஸி, ஸ்டெய்ன் விலகல்!
தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் தொடங்கியுள்ளது...
தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக டுபிளெஸ்ஸி விலகியதால் அவருக்குப் பதிலாக டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஸ்டெய்னும் உடல்நலக் குறைவு காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டி, ஐசிசியின் புதிய விதிமுறைகளின் படி 4 நாள் டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. ஆட்டநேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.