மகளிர் உலகக் கோப்பை: தீப்தி சர்மா, மிதாலி ராஜ் அபார பேட்டிங்!
இலங்கைக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஆகியோர்...
இலங்கைக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்துள்ளார்கள்.
டெர்பியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பூணம் ரெளத், மந்தனா ஆகியோர் முறையே 16, 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள். பிறகு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா, மிதாலி ராஜ் ஜோடி அபாரமாக விளையாடியது. இருவருமே அரை சதம் எடுத்தார்கள்.
தீப்தி சர்மா 78 ரன்கள், மிதாலி ராஜ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.