செய்திகள்

பாக். வீரர் அசார் அலி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள்

எழில்

இருநாடுகள் இடையே அரசியல் காரணமாக பகைமை நிலவி வந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் ஆடுகளத்தில் நட்புணர்வையே வெளிப்படுத்திவருகிறார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தாலும் போட்டி முடிவடைந்தபிறகு சோயிப் மாலிக், அசார் முகமது ஆகியோருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார் கோலி. 

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் தோனி, கோலி, யுவ்ராஜ் ஆகிய மூன்று வீரர்களும் அசார் அலியின் இரு மகன்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இப்படங்களை வெளியிட்டு மூவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் அசார் அலி. 

இதற்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மகனுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதையடுத்து அசார் அலி இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT