ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பி.வி.சிந்து 21-10, 20-22, 16-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன தைபேவின் தாய் ஜு இங்கிடம் தோல்வியடைந்தார்.
சாய்னா தனது காலிறுதியில் 17-21, 21-10, 17-21 என்கிற செட் கணக்கில் சீனாவின் சன் யூவிடம் தோல்வியடைந்தார்.
முன்னதாக, இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சாய் பிரணீத்தைத் தோற்கடித்தார்.