செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி:  தமிழ்நாடு சாம்பியன்! தினேஷ் கார்த்திக் அபார சதம்!

எழில்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

தில்லியில் இன்று நடைபெற்ற இந்த இறுதிச்சுற்றில் முதலில் பேட் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் குவித்தார். பெங்கால் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த பெங்கால் அணியில் சேட்டர்ஜி 79 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்தபோதும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அந்த அணி 45.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகத் தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சதமடித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT