முகப்பு
செய்திகள்

என் நாடுதான் முக்கியம்: ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்டின் டூ பிளிசிஸ்!

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ்

செய்திகள்

என் நாடுதான் முக்கியம்: ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்டின் டூ பிளிசிஸ்!

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:28 PM
பகிர்:

மும்பை: ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ் அந்த அணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் டூ பிளிசிஸ் இடம்பிடித்திருந்தார். அந்த அணியில் ஐ.பி.எல் விதிகளின் படி ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டான் கிறிஸ்டியன், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி வருகின்றனர். எனவே டு பிளிசிஸ்-க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்கி 18-ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த ஒரு நாள் போட்டிகள் மே 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாமானது தற்போது தென்ஆப்பிரிக்காவில் துவங்கியுள்ளது. புனே அணியில் இடம் இல்லாதா காரணத்தால் தென்ஆப்பிரிக்கா தேசிய அணியில் இணைய டு பிளிசிஸ் முடிவு செய்துள்ளார். இதனால் புனே அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று தகவலாக தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →