செய்திகள்

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு மோடி வாழ்த்து!

எழில்

சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் 9 சுற்றுகளில் விளையாடிய தமிழகத்தின் வைஷாலி 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார். மற்றொரு இந்திய வீராங்கனையான பத்மினி 7 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். ஆடவர் பிரிவில் தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில் வைஷாலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வைஷாலியின் சாதனைக்கு நாடு பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT