சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் 9 சுற்றுகளில் விளையாடிய தமிழகத்தின் வைஷாலி 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார். மற்றொரு இந்திய வீராங்கனையான பத்மினி 7 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். ஆடவர் பிரிவில் தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.
இதையடுத்து இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில் வைஷாலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வைஷாலியின் சாதனைக்கு நாடு பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.