செய்திகள்

மகாராஷ்டிர ஓபன்: சிலிச் பங்கேற்பு

DIN

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 6-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், உலகின் 14-ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் 4 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் சிலிச், ஆன்டர்சனோடு தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பெளதிஸ்டா அகுட், 42-ஆவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் ராபின் ஹúஸ ஆகியோரும் அடங்குவர். இதில் பெளதிஸ்டா நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர, தைவானின் யென்-சன் லு (தரவரிசையில் 71-ஆவது இடம்), பிரான்ஸ் வீரர்களான ஜெரிமி சார்டி (77-ஆவது இடம்), பியரே ஹியூஜஸ் ஹெர்பர்ட் (81-ஆவது இடம்), கில்ஸ் சிமன் (91-ஆவது இடம்) ஆகியோரும் பங்கேற்கின்றனர். சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுவந்த இந்த டென்னிஸ் போட்டி, எதிர்வரும் சீசன் முதல் புணே நகருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தப் போட்டியில் வைல்டு கார்டு பிரிவில் போட்டியிட உள்ளவர்களை தேர்வு செய்யும் பணிகள் விரைவில் நடைபெறும்' என்று மகாராஷ்டிர டென்னிஸ் சங்கத்தின் செயலர் சுந்தர் ஐயர் 
கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT