செய்திகள்

5-ஆவது ஒருநாள்: 243 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா!

DIN

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. பின்னர் நடந்த 4-ஆவது ஒருநாள் போ்டடியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் 53, ஸ்டாய்னிஸ் 46, டிராவிஸ் ஹெட் 42, ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் அக்ஸர் படேல் 3, பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT