செய்திகள்

ஃபிஃபா விருது: சிறந்த கால்பந்து வீரர் - ரொனால்டோ!

எழில்

போர்ச்சுக்கல் அணியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபிஃபா அமைப்பின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5-வது முறையாகப் பெற்றுள்ளார்.

2017-ம் ஆண்டுக்கான ஃபிபா விருதுகள் லண்டனில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஃபிபா கால்பந்து அமைப்பின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே மெஸ்ஸி மற்றும் நெய்மார் ஆகியோர் பெற்றார்கள். சிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி 5 முறை பெற்றுள்ளார். அச்சாதனையை சமன் செய்துள்ளார் ரொனால்டோ. இவர், கடந்த வருடமும் இவ்விருதைப் பெற்றார். 

போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காகத் தன் திறமையை வெளிப்படுத்தியதால் ரொனால்டோவுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என இரு போட்டிகளிலும் இவர் பங்கேற்ற ரியல் மாட்ரிட் அணி பட்டம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT