செய்திகள்

தோனி நீடிப்பதில் சந்தேகமே இல்லை

DIN

தோனி தனக்கான கிரிக்கெட் வாழ்க்கையில் பாதியைக் கூட தாண்டவில்லை. எனவே, அவர் அணியில் நீடிப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சில பரிசோதனை முயற்சிகள் மற்றும் சுழற்சி முறைகளில் இந்திய அணி ஈடுபடவுள்ளது. ஆனால், அதில் தோனிக்கான இடத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
இந்திய அணியில் தோனி தவிர்க்க முடியாத ஒரு நபர். அவர் தனது கிரிக்கெட் பாதையில் பாதியளவைக் கூட தாண்டவில்லை. அவரது காலம் நிறைவடைந்துவிட்டதாக எவரேனும் கருதினால், அது அவர்களின் தவறாகும்.
தோனியின் பேட்டிங் புள்ளி விவரங்களை தவிர்த்துவிடுங்கள். இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் விளங்குகிறார். வேறென்ன வேண்டும்? நீண்ட காலம் விளையாடும் காரணத்தால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சுனில் கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் 36 வயது வரையில் விளையாடும்போது மாற்ற நினைத்தோமா? தோனி மிகச் சிறந்த வீரர் ஆவார் என்று ரவி சாஸ்திரி கூறினார்.
இந்நிலையில், புஜாரா, அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் விரைவில் அணியில் இணைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT