சர்வதேச சதுரங்கப் போட்டியில் 7-ஆம் வகுப்பு மாணவர் முதலிடம்
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கிரீஸ் நாட்டில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. மாணவர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசுக்குரியவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவர் பிரக்ஞானந்தாவை பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டினார்.