முகப்பு
செய்திகள்

தண்ணீரை வடிகட்டுவது போன்று குருவையும் வடிகட்டித் தேடுங்கள்: வீரு பாபா அருளாசி

தண்ணீரை வடிகட்டுவது போன்று குருவையும் வடிகட்டித் தேடுங்கள் என்று வீரு பாபாவாக மாறிய வீரேந்திர சேவாக் ட்வீட் வைரலாகி வருகிறது.

Updated On : 4 ஆகஸ்ட், 2018 at 2:12 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:55 PM

தண்ணீரை வடிகட்டுவது போன்று குருவையும் வடிகட்டித் தேடுங்கள் என்று வீரு பாபாவாக மாறிய வீரேந்திர சேவாக் ட்வீட் வைரலாகி வருகிறது.

முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது அதிரடி பேட்டிங்கைப் போன்று அதிரடி ட்வீட்களுக்கும் பிரபலமானவர். சேவாக்கின் ட்வீட்களுக்கு என்றே ட்விட்டரில் அவருக்கான பிரத்தியேக பின்தொடர்வாளர்கள் இருந்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சனங்கள் முதல் பிற முக்கிய விவகாரங்கள் தொடர்பான விமர்சனங்கள் வரை அவரது அதிரடி ட்வீட்கள் பலரது ஆதரவைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், யோகிகளைப் போன்று பாபா வேடமிட்ட சேவாக், அந்த புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமல்லாமல், தண்ணீரை வடிகட்டுவது போன்று குருவையும் வடிகட்டித் தேட வேண்டும் என்று அறிவுரை (அருளாசி) வழங்கியுள்ளார். கிரிக்கெட் உலகில் வீரு என அறியப்பட்ட சேவாக், தற்போது வீரு பாபா-வாக மாறியுள்ளதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.