முகப்பு
செய்திகள்

தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது: நினைவஞ்சலியில் உருகிய ஹர்பஜன் சிங்

சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நினைவஞ்சலியில் உருகியுள்ளார்.

செய்திகள்

தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது: நினைவஞ்சலியில் உருகிய ஹர்பஜன் சிங்

சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நினைவஞ்சலியில் உருகியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நினைவஞ்சலியில் உருகியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் பதப்படுத்தப்பட்டு, இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். நள்ளிரவு ஒன்றரை மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும் பின்னர் சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது. அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாசாலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →