முகப்பு
செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: உணவு இடைவேளை அறிவிப்பு!

மழை தொடர்ந்து பெய்வதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க வேண்டிய இந்திய அணி, மோசமான ஆட்டத்தால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, மழையால் தாமதம் ஆகியுள்ளது. இதனால் டாஸ் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை. அணி குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. மழை தொடர்ந்து பெய்வதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments