செய்திகள்

மூன்றாவது டெஸ்டில் ரிஷப் பந்த் வாய்ப்பு பெறுவார்: கவாஸ்கர் கணிப்பு! 

எழில்

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

மூன்றாவது டெஸ்டில் ரிஷப் பந்த் வாய்ப்பு பெறுவார் என நினைக்கிறேன். விக்கெட் கீப்பராக அல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு வாய்ப்பளிக்கலாம். இந்திய அணியுடன் இரு வாரங்களாக இணைந்து பயிற்சிகள் மேற்கொள்வதால் தன் மீதான எதிர்பார்ப்பை அவர் உணர்ந்திருப்பார். அவருக்கு இது அருமையான வாய்ப்பு. எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT