முகப்பு
செய்திகள்

ஈடன் கார்டன்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 இருக்கைகள்: கங்குலி அறிவிப்பு

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் செளரவ் கங்குலி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் செளரவ் கங்குலி.

பிரபல ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இனிமேல் மாற்றுத் திறனாளிகளுக்காக 50 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று கங்குலி அறிவித்துள்ளார். ஜி பிளாக்கில் உள்ள முன்வரிசை இருக்கைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களைச் சிரமம் இன்றி அவர்கள் பார்த்துச் செல்லும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சிறப்புக் கழிப்பறைகள் கட்டப்படும். வீல்சேர்கள் வசதிகள் செய்து தரப்படும் என்று கங்குலி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments