செய்திகள்

உலகக் கோப்பை கூடைப்பந்து: இந்தியா தோல்வி

தினமணி

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா 88-102 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்டானிடம் தோல்வி கண்டது.
 ஆசிய அணிகளுக்கான இந்த தகுதிச்சுற்று ஆட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்துடன் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா, அனைத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில், "சி' பிரிவின் கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா, திங்கள்கிழமை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் லெபனானை எதிர்கொள்கிறது.
 முன்னதாக, ஜோர்டானுக்கு எதிரான ஆட்டத்தில் சத்னம் சிங் தலைமையிலான இந்திய அணி அருமையாக ஆடத் தொடங்கியது. ஆனால், முதல் கால்மணி நேர முடிவில் முன்னிலை பெற்ற ஜோர்டான், இறுதி வரையில் அதை தக்கவைத்துக் கொண்டது.
 இந்திய தரப்பில் அரவிந்த் அண்ணாதுரை அதிகபட்சமாக 28 புள்ளிகளை கைப்பற்றினார். சத்னம் சிங் 20 புள்ளிகள் வென்றார். ஜோர்டான் தரப்பில் ஹுசைன் 19, டக்கர் 18 புள்ளிகள் வென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT