முகப்பு
செய்திகள்

இலங்கை  முத்தரப்பு டி20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு: கோலி, தோனிக்கு ஓய்வு! 

இலங்கையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:20 PM
பகிர்:

மும்பை: இலங்கையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மார்ச் 6-ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை தவிர மூன்றாவதாக எந்த நாடு பங்கேறது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஓய்வின்றி கடுமையாக விளையாடி  இருந்த கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் , எம்.எஸ்.தோனி, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியa அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியை அறிவித்த பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சமீபத்தில் உள்நாட்டில் நடந்த சயீத் முஷ்டாக் அலி டி 20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

'ஆல் ரவுண்டர்' பாண்ட்யாவுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் ரன்களைக் குவித்த மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழுமையான அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், ரிஷ்பா பந்த்(விக்கெட் கீப்பர்)

முழு கட்டுரையைப் படிக்க →