செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: காலிறுதியில் இந்தியா - வங்கதேசம் மோதல்!

எழில்

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றது. இதன்மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் 'பி' பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது இந்தியா.

இரு அணிகள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 21.4 ஓவர்களில் 155 ரன்களுடன் வாகை சூடியது.

இந்திய அணி தனது காலிறுதியில் வங்கதேச அணியைச் சந்திக்கவுள்ளது. ஜனவரி 26 அன்று இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT