முகப்பு
செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் பெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளை கரோலினா பிளிஸ்கோவா, எகடெரினா மகரோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:08 AM
பந்தை திருப்பி அனுப்பும் ரோஜர் பெடரர்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளை கரோலினா பிளிஸ்கோவா, எகடெரினா மகரோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் செக் நாட்டின் 7-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் வீழ்த்தினார். 
இதே போல் மற்றொரு ஆட்டத்தில் உலகின் 35-ஆம் நிலை வீராங்கனை எகடெரினா மகரோவா 3-6, 4-6 என நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியிடம் தோல்வியடைந்து வெளியேறினார். 
ஏற்கெனவே முன்னணி வீராங்கனைகளான ஷரபோவா, பெட்ரா விட்டோவா, வோஸ்னியாக்கி, சிமோனா ஹலேப், ஸ்லோன், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறி விட்டனர். 11 ஆம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் மட்டுமே பட்டத்துக்கான போட்டியில் உள்ள முன்னணி வீராங்கனை ஆவார்.
காலிறுதியில் பெடரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-0, 7-5, 6-4 என நேர் செட்களில் மன்னாரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரனோயிக் 6-3, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் மெக்டொனல்டை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.