முகப்பு
செய்திகள்

மகளிர் டி20: இங்கிலாந்து பேட்டிங்!

இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:36 PM
பகிர்:

இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.

இந்தியா- இங்கிலாந்து மோதும் மற்றொரு லீக் போட்டி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணி 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்திய அணி ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுடன் இரு போட்டிகளிலும், இங்கிலாந்துடன் ஒரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்ற சூழ்நிலையில், இத்தொடரில் ஒரு வெற்றியையாவது பதிவு செய்யும் நோக்கில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.