முகப்பு
செய்திகள்

மே.இ.தீவுகள் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது: அஸ்வின் 4 விக்கெட்டுகள்

மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று விளையாடி வருகிறது. இதனால் இந்திய அணி மிகப்பெரிய அளவில் இன்னிங்ஸ் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 6 அக்டோபர், 2018 at 11:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:29 PM

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

Advertisement

இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று விளையாடி வருகிறது. இதனால் இந்திய அணி மிகப்பெரிய அளவில் இன்னிங்ஸ் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.