ஆர்ஜென்டீனா டென்னிஸ் வீரரும், உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டின் டெல்பொட்ரோ ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் பலத்த காயமடைந்தார்.
தனது விளையாடும் காலம் முழுவதும் காயங்களால் பாதிக்கப்பட்டு சிறிது கூட அதிர்ஷ்டம் இல்லாத முன்னணி வீரராக உள்ளார் டெல்பொட்ரோ.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நாக் அவுட் சுற்றில் போர்னோ கோரிக்குடன் நடைபெற்ற ஆட்டத்தில் வலது முட்டில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
நான்காம் நிலை வீரரான அவர் இந்த சீசனில் தான் சிறப்பாக ஆடி வருவதாக தெரிவித்திருந்தார். இந்த காயம் ஏற்பட்டது எனக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதில் இருந்து மீண்டும் குணமடைந்து வருவேனா எனத் தெரியவில்லை. என்னை வலுவில்லாமல் செய்து விட்டது இந்த காயம் என பொட்ரோ வேதனை தெரிவித்தார்.