செய்திகள்

டென்மார்க் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

DIN


டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
உலகின் 6-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 14-ஆம் நிலை வீரரான சீனாவின் லின் டானை 18-21, 21-17, 21-16 என்ற செட்களில் வென்றார். 2 முறை ஒலிம்பிக் சாம்பியன், 5 முறை உலக சாம்பியனான லின் டானை ஸ்ரீகாந்த் வீழ்த்துவது இது 2-ஆவது முறையாகும்.
இருவரும் இத்துடன் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். கடைசியாக 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் காலிறுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரீகாந்த் இப்போட்டியின் காலிறுதியில் மற்றொரு இந்தியரான சமீர் வர்மா சந்திக்கிறார். உலகின் 23-ஆம் நிலை வீரரான சமீர் வர்மா, தனது முந்தைய சுற்றில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார்.
சாய்னா நெவால்: மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியை 21-15, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, இதுவரை 6 முறை யமாகுசியை சந்தித்துள்ள நிலையில், தற்போது 2-ஆவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். 
சாய்னா தனது காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 18-21, 22-20, 21-18 என்ற செட்களில் தென் கொரியாவின் லீ ஹோ சி/ஷின் சியுங் சான் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT