செய்திகள்

உசேன் போல்ட்டுடன் ஒப்பந்தம்: ஆஸி. கால்பந்து கிளப் முடிவு

DIN


எட்டுமுறை ஒலிம்பிக் சாம்பியனும், தொழில்முறை கால்பந்து வீரராக மாற முயற்சித்து வரும் உசேன் போல்ட்டுடன் ஒப்பந்தம் செய்ய ஆஸி. கால்பந்து அணியான கோஸ்டல் மரைனர்ஸ் முன்வந்துள்ளது.
உலகின் அதிவேக தடகள வீரரான போல்ட். தற்போது ஆஸ்திரேலியாவில் கால்பந்து ஆட்டத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் அண்மையில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 2 கோல்களையும் அடித்தார். ஏ லீக் போட்டியில் விளையாட தீவிர முயற்சியில் உள்ளார் போல்ட். இந்நிலையில் ஆஸி. கால்பந்து கிளப்பான கோஸ்டல் மரைனர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது.
மால்டா நாட்டு சாம்பியன் வலேட்டாவும் உசேன்போல்ட்டை ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது. எனினும் கால்பந்து நிபுணர்கள் போல்டின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். கோஸ்டல் மரைனர்ஸ் அணி பயிற்சியாளர் முல்வே இதை உறுதி செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT