முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை: மூன்று இந்திய வீரர்கள் விலகல்! ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள பிசிசிஐ!

பாண்டியா மட்டுமல்லாமல் காயம் காரணமாக அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 164 ரன்களை எடுத்து வென்றது.

நேற்றைய ஆட்டத்தின் 18-வது ஓவர் முடிவில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடைசிப் பந்தை வீசியபோது கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

பாண்டியா மட்டுமல்லாமல் காயம் காரணமாக அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இதையடுத்து பாண்டியாவுக்குப் பதிலாக தீபக் சஹாரும் அக்‌ஷல் படேலுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக சித்தார்த் கெளலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிசிசிஐயின் செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments