செய்திகள்

இலங்கை கிரிக்கெட் கேப்டன் மேத்யூஸ் நீக்கம்

DIN


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து படுதோல்வியுடன் இலங்கை அணி வெளியேறிய நிலையில் அதன் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். அவருக்கு பதிலாக தினேஷ் சண்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் பி பிரிவில் இடம் பெற்ற இலங்கை அணி, வங்கதேசம் மற்றும் ஆப்கன் அணிகளிடம் படுதோல்வியடைந்து வெளியேறியது. கேப்டன் மேத்யூஸ் அணியை சரியான வகையில் வழிநடத்திச் செல்லவில்லை எனக்கூறி ஒரு நாள் மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என வாரியம் அறிவுறுத்தியது. டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ள சண்டிமாலே தற்போது ஒருநாள், டி20 அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பலிகடா ஆக்கி விட்டனர்: இதுகுறித்து பதவி நீக்கப்பட்ட கேப்டன் மேத்யூஸ் கூறுகையில்: ஆசிய கோப்பை தோல்விக்கு என்னை பலிகடா ஆக்கி விட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT