செய்திகள்

இரட்டை சதம் அடித்து ஷுப்மன் கில் சாதனை

DIN

முதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்திய மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 3-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் கரிபீயன் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 19 வயதான ஷுப்மன் கில் 250 பந்துகளில் 204 ரன்களை விளாசி கெளதம் கம்பீரின் சாதனையை முறியடித்தார்.
3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா ஹனுமாவிஹாரியுடன் இணைந்து அற்புதமாக ஆடினார். கில் இரட்டை சதத்தில் 2 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும். விஹாரி 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்தவுடன் 4 விக்கெட் இழப்புக்கு 365 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்திய ஏ அணி.
வெற்றிக்கு 373 ரன்கள் தேவை என்ற பெரிய ஸ்கோருடன் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்துள்ளது மே.இ.தீவுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT