செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த மாதம் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார். இதனால், அந்த அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பத் தொடங்கியது.

இந்நிலையில், ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருவதற்கு மத்தியில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா பிடிஐ பேசுகையில்,

"வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ராகுலைக் கேப்டனாக நியமிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை விமரிசித்த விமர்சகர்களுக்கு அவர் பதிலடி தந்துள்ளார். பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அவருடையத் திறனைப் பார்ப்பீர்கள். அவர் எங்களுடைய ஒருமித்தத் தேர்வாகவே இருந்தார்" என்றார்.

2018-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன் கேஎல் ராகுல் ரூ. 11 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT