செய்திகள்

மகளின் அரசியல் பதிவு: செளரவ் கங்குலி வேண்டுகோள்!

எழில்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் வீரரும் பிசிசிஐயின் தலைவருமான செளரவ் கங்குலியின் மகள் சனா (18) பதிவு ஒன்றை தனது இன்ஸ்டகிராம் தளத்தில் பகிர்ந்தார். எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வரிகள் அடங்கிய அந்தப் பதிவு பிறகு நீக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பதிவு உண்மையானது அல்ல என்று கங்குலி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

இந்தச் சர்ச்சைகளிலிருந்து மகள் சனாவை விட்டு விடுங்கள். அந்தப் பதிவு உண்மையானது அல்ல. அரசியலைப் பற்றி தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் பெரிய பெண் அல்ல என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT