சைனி 
செய்திகள்

அசத்திய இந்திய ஏ பந்துவீச்சாளர்கள்: 140 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி!

ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 2-ம் நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது... 

எழில்

இந்திய அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பதற்கு இது இன்னொரு சான்று.

மைசூரில் நடைபெற்று வரும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதல் நாளன்று இந்திய ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய ஏ அணி, 114.4 ஓவர்களில் 392 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்வரிசைகள் வீரர்கள் தவிர நடுவரிசை, பின்வரிசை வீரர்களில் விக்கெட் கீப்பர் பரத்தைத் தவிர இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பரத் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சேப்பல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, 48.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் சைனி, நதீம் தலா 3 விகெட்டுகளும் ஆரோன், ஜலஜ் சக்ஸேனா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி 2-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில்விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 228 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT