செய்திகள்

அம்பட்டி ராயுடு பந்துவீசத் தடை: ஐசிசி அறிவிப்பு!

எழில்

இந்திய வீரர் அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு, கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதால் சர்வதேசப் போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசினார் ராயுடு. பந்துவீசும்போது ராயுடுவுடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயுடுவின் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது. ஆனால் அவர் பரிசோதனையில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது, சர்வதேசப் போட்டிகளில் ராயுடு பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது ஐசிசி. தன்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றிக்கொண்ட பிறகு மறு ஆய்வுக்கு ராயுடு விண்ணப்பிக்கலாம். அதுவரை அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT