செய்திகள்

ரிஷப் பந்த் அபார பேட்டிங்: 4-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

எழில்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 4-வது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியைத் தோற்கடித்துள்ளது இந்திய ஏ அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. போப், முல்லானே தலா அரை சதம் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 42 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் 76 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் ஹூடா 47 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆட்ட நாயகன் விருது ரிஷப் பந்துக்கு வழங்கப்பட்டது. 

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி ஆட்டம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT