செய்திகள்

ஏலத்தில் விடப்பட்ட போரீஸ் பெக்கரின் பொருள்கள்: ரூ. 5.84 கோடி கிடைத்தது!

எழில்

17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவர் ஜெர்மனியின் போரீஸ் பெக்கர். 3 விம்பிள்டன் பட்டம் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 49 பட்டங்களை வென்றவர். 

பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கியுள்ள 51 வயது பெக்கர் அவற்றைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகிறார். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக தான் விளையாடி பெற்ற கோப்பைகள், பரிசுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது. இதில் அவருடைய 1989 யு.எஸ். ஓபன் கோப்பையால் மட்டும் 1 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த ஏலத்தில் கிடைத்துள்ள வருவாய் மூலம் பெக்கரின் ஒரு பகுதி கடன்கள் செலுத்தப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT