முகப்பு
செய்திகள்

ஏலத்தில் விடப்பட்ட போரீஸ் பெக்கரின் பொருள்கள்: ரூ. 5.84 கோடி கிடைத்தது!

பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:30 AM
பகிர்:

17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவர் ஜெர்மனியின் போரீஸ் பெக்கர். 3 விம்பிள்டன் பட்டம் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 49 பட்டங்களை வென்றவர். 

பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கியுள்ள 51 வயது பெக்கர் அவற்றைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகிறார். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக தான் விளையாடி பெற்ற கோப்பைகள், பரிசுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது. இதில் அவருடைய 1989 யு.எஸ். ஓபன் கோப்பையால் மட்டும் 1 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த ஏலத்தில் கிடைத்துள்ள வருவாய் மூலம் பெக்கரின் ஒரு பகுதி கடன்கள் செலுத்தப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.