செய்திகள்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஆடவர், மகளிர்

DIN

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.
கட்டாக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 பிரிவு ஆட்டங்களில்
ஆடவர் பிரிவில் இலங்கை, மலேசிய அணிகளை 3-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜி.சத்யன், சரத்கமல், அந்தோணி அமல்ராஜ், மானவ் தாக்கர், ஆகியோர் வெற்றியில் பங்கு வகித்தனர்.
மகளிர் பிரிவில் இந்திய அணி வேல்ஸ், மலேசியா, நைஜீரியாவை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அர்ச்சனா, மனிகா பத்ரா, மதுரிகா பட்கர், சுதிர்தா முகர்ஜி, அஹிகா முகர்ஜி ஆகியோர் மகளிர் அணி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
அதே போல் இங்கிலாந்து ஆடவர், மகளிர் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்நாட்டு ஆடவர் 3-2 என சிங்கப்பூரையும், ஆஸி.யை 3-1 எனவும் வென்றனர். மகளிர் அணி ஆஸி.யை 3-1, இலங்கையை 3-0 என வீழ்த்தினர்.
தனிநபர் பிரிவில் ஜி.சத்யன், மனிகா பத்ரா முதல்நிலை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT