முகப்பு
செய்திகள்

பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது: ஷகிப் அல் ஹசன்

பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என வங்கதேச முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார். 

Updated On : 3 ஜூன், 2019 at 4:24 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM

பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என வங்கதேச முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய வங்கதேச அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 330 ரன்கள் குவித்தது. இதுவே வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் 75 ரன்கள் குவித்த வங்கதேச அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

இந்த உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் சந்திக்கவுள்ள அனைத்து சவால்களுக்கும் கடந்த காலத்தில் எங்களை தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உடனான முத்தரப்பு தொடர் எங்களை தயார்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியது. அதுவே எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இது வெறும் தொடக்கம் தான் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் நிறைய சவால்கள் எங்களுக்கு காத்திருக்கின்றன. 

Advertisement

கடந்த 12 ஆண்டுகளில் வங்கதேச கிரிக்கெட் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுதான் எங்கள் ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணிகளுடனான எங்கள் தோல்விகளை ரசிகர்கள் ஏற்பதில்லை. இதனால் எங்களுடைய ஆட்டமும் மேம்பட்டுள்ளது. இது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.