முகப்பு
செய்திகள்

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டார்: சௌரவ் கங்குலி

தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார். 

Updated On : 20 ஜூன், 2019 at 11:05 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:48 PM

தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஸ்வர் காயமடைந்தது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. விளையாட்டில் காயங்கள் சாதாரணமானது. ஷிகர் தவனும் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். 

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டார். புவனேஸ்வர் குமார் இல்லாத வெற்றிடத்தை சரியாக பூர்த்தி செய்தார். தற்போதைய இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது. எனவே நாம் அரையிறுதிக்கு முன்னேறுவது இயல்பான ஒன்றுதான்.

Advertisement

நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்கள் சிறப்பாக உள்ளன. எனவே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் இந்தியா எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.