முகப்பு
செய்திகள்

பயங்கரவாதம் தொடர்பான பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:17 AM
பகிர்:


பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. 

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பாதுகாப்பு தர வேண்டும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி பிசிசிஐ சிஓஏ தலைவர் வினோத் ராய் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "இந்திய அணியின் பாதுகாப்புக்கு ஐசிசி மிகுந்த முன்னுரிமை தரும். பிசிசிஐ கடிதத்தை படித்தேன். பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை தருவோம். வரும் மார்ச் 2-ஆம் தேதி துபையில் நடக்க உள்ள ஐசிசி குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு திட்டங்களை பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவிப்போம். அது அவர்களுக்கு திருப்தி தரும்" என்றார் மனோகர்.

இந்நிலையில், ஐசிசி குழுக் கூட்டம் துபையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் பிசிசிஐயின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக, அவர் தெரிவித்ததாவது, 

"இந்த கோரிக்கையை தற்போதைய சூழலில் செயல்படுத்த முடியாது என்பதை ஐசிசி தெளிவுபடுத்தியது. அதேசமயம், உலகக் கோப்பையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொண்டது" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →