செய்திகள்

டி20: மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-2 என சமன் செய்தது மே.இ.தீவுகள். இந்நிலையில் முதல் டி20 ஆட்டம் நேற்று செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பூரான் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். கெயில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் டாம் கரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இலக்கை, 18.5 ஓவர்களில் அடைந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 

இதையடுத்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. அடுத்த டி20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT