செய்திகள்

இந்திய மகளிர் டி20 அணியை மீண்டும் வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து அணி!

எழில்

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20யையும் வென்று தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.

குவாஹாட்டியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் இந்தமுறையும் பேட்டிங்கில் சொதப்பியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே  எடுக்கமுடிந்தது. மிதாலி ராஜ் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் பிரண்ட் 3 விக்கெட்டுகளையும் லின்சே ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

இந்த எளிதான இலக்கை 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது இங்கிலாந்து மகளிர் அணி. தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 55 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி வென்றுள்ளது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT