செய்திகள்

பிசிசிஐயின் ரூ. 5 கோடி ஒப்பந்தம் பெற்ற ரிஷப் பந்த்! ஒப்பந்தப் பட்டியலில் இருந்து முரளி விஜய் நீக்கம்!

எழில்

2018-19 சீசனுக்காக ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் ஆகியோர் ரூ. 5 கோடி உள்ள கிரேடு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள். 

கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத ரிஷப் பந்த் நேரடியாக ஏ கிரேடுக்கு உயர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரையிலான காலகட்டத்தைக் கொண்டது. 

ரூ. 7 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு ஏ + பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, தோனி, தவன், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் ரூ. 5 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள்.

ரூ. 3 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு பி பிரிவில் கேஎல் ராகுல், உமேஷ் யாதவ், சாஹல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ரூ. 1 கோடி ஒப்பந்தம் கொண்ட கிரேடு சி பிரிவில் கெதவ் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு, மணீஷ் பாண்டே, விஹாரி, கலீல் அஹமது, சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு, விஹாரி, கலீல் அஹமது ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள்.

கடந்த வருட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் இந்தமுறை இடம்பெறவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT